Monday, 24 December 2012

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 36--40





திருவாலங்காடு - வடாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் சென்னைக்கருகே அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)

சிறப்புகள்

  • நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.
  • மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
  • இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.
  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன.
  • மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.
  • சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
  • சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.
  • இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
  • கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. 
  • கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.
  • பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி.
  • பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.-ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம் ' உள்ளது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரில் 'சாட்சி பூதேஸ்வரர் ' சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் உள்ளது.
  • தீப்பாய்ந்த வேளாளர்களின் மரவில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு சந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர். இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழச் செய்கிறது.
  • கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.
  •  

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 31--35





History
It was the time when both Lord Shiva and Kali had debate on who is the best dancer. To conclude and make a decision a competition was arranged. This was witnessed by all the God’s and Godess including sages.The dance performance started and each had their turn to demonstrate their talent and non are less competent. During this period, Shiva’s ear ring falls down and in order to avoid any hindrance to the performance he uses his right leg to pick the ear ring wars it his ear.
Kali being women cannot raise her legs that high in front of crowd and thus gets defeated. Hence she is in his temple in her dancing pose.

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 26--30





Karaikal Ammaiyar’s Story: Punithavathi was name to Karaikal Ammaiyar in given by her parents. She was married to Paramadathan a business man in those days.One day Paramadathan was given two mangoes by one of his visitors on business purpose. He sent it to his home through his men which was received by his wife Punithavathi.
During this time a Shiva devotee came to her house asking for bhiksha. She being a Shiva devotee herself, arranged for lunch for the devotee. To compensate the absence side dishes she also gives one of the mangoes sent by her husband. The devotee was happy with Punithavathi’s hospitality left with filled stomach and blessings.


Paramadathan came home for lunch and Punithavathi served him lunch with the remaining mango. The taste of the fruit made Paramdathan to ask. But she has already given it to Shiva devotee. Not knowing what to do, she requests Lord Shiva for the mango and lo, there it comes in her hands. She servers this mango to her loving husband who immediately identifies that the mangos taste is far superior than the previous one he had and wanted to know where she got this mango. Though she was hesitant at first but later told him all the happenings.Paramadathan, on hearing that abandons her as his wife as he felt is not eligible to be her husband. Punithavathi then prayed God to have a skeletal body and praise Lord till her life ends thus becoming Karaikal Ammaiyar.
Karaikal Ammaiyar visited Kailash the abode of Lord Shiva seeking moksha but he was asked to wait at Thiruvalangadu.
Karailal Ammaiyar was given moksha at this place and she also got to see the cosmic dance in Chittra Sabai – Gem Court.Thiruvalangadu is situated around 45 Kms from Chennai and is well nourished with sub urban trains and busses travelling to Thiruvallur and Arakkonam

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 21--25





The temple is complete in all respects in accordance with the traditional Cholan temple architecture that is typical of a Shaivaite shrine. The shrine's importance is enhanced by the mystic location of the temple on what was once a forest of banyan trees. The temple also sports a Large tank as well.
Shivraatri (during Makara) and Thiruvadirai (during Dhanur) festivals are celebrated in a grand manner in this temple.

Sunday, 23 December 2012

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 16--20





The temple is known not only for its architectural splendour, but also for the legends associated with mallikarjuna. The primary deity at the Sanctum is known as "Vadaranyeswarar" and the Lord's consort, "Vandarkuzhali Amman". The sthala Vriksham is a large banyan tree located behind the sanctum on the North East. It is here in this temple that Lord Shiva requested the great Karaikkal Ammeiyar (Peyar) to undertake a marathon walk to Mount Kailash on her hands and be an omnipresent witness to his cosmic dance.

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu,pic 11--15





The temple, built by the Cholas during the 12th century, (though inscriptions evidence the 5th century) is regarded as a sacred Shaivaite temple in that it is one of the 5 majestic cosmic dance halls(pancha sabhai) of Lord Shiva, known as "Ratna Sabai". The other 4 "Sabais" are Chidambaram- Kanaka Sabhai, Meenakshi Amman Temple(Madurai - Rajatha Sabhai), Thirukutralam - Chitra Sabha and Nellaiappar Temple (Tirunelveli - Tamra Sabhai). Legend has it that when the Lord was once entranced in a deep cosmic dance, the jewels from the Lord's anklets fell onto the earth and scattered in 5 places, Thiruvalangadu being one of them. The site is one of the 275 celebrated Shaivaite sites in TN ("Padal Petra Stalam")

Vada aaranyeswarar Temple,thiruvaalangadu pic 6--10







திருவாலங்காடு நடராஜர் கோவில்

வடாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள்


ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முவரதும் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்


சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.




சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் "அம்மையே' என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.





இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது.



·  நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம். மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.


கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன

மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன
இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்

சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.



சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.


இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.


கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது


பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.


மூலவர் சுயம்பு மூர்த்தி.





ஆலய விபரம்: கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும்,வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.